மைக் டெஸ்டிங் ... 1, 2, 3
8 years ago
இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி...தலைவர் வே.பிரபாகரன்

மிழ்மகன்
தவன்

நடிகை ஜோதிகாவுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆபரேஷன் மூலம் பிரசவம் நடந்தது.காதல் திருமணம்நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார்கள்.அப்போது 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11&ந் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சூர்யா&ஜோதிகா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.பெண் குழந்தைஅதைத் தொடர்ந்து ஜோதிகா கர்ப்பமுற்றார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவர், பிரசவத்துக்காக சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நேற்றிரவு 8 மணிக்கு சேர்க்கப்பட்டார்.9.22 மணிக்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 'சிசேரியன் ஆபரேஷன்' மூலம் பிரசவம் நடந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இனிப்புகுழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் நடிகர் சூர்யா மகிழ்ச்சி அடைந்தார். அவருடைய தந்தை நடிகர் சிவகுமார், தம்பி நடிகர் கார்த்தி ஆகியோர் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் குழந்தை பிறந்த தகவலை போன் மூலம் தெரிவித்தனர். நடிகர் சூர்யா நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.இதுகுறித்து நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:&நல்ல உள்ளங்கள் வாழ்த்துஇந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல பாகங்களிலும் வாழும் மக்கள் தங்களது பிள்ளை போல் நினைத்த சூர்யா&ஜோதிகா திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பூஜைகள் நடத்தி பலர் வேண்டிக் கொண்டனர். மானசீகமாக இந்த இளஞ் ஜோடியை வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த மகிழ்வான செய்தியை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்.பிறந்த இந்த பெண் குழந்தை எல்லா சிறப்பும் பெற்று வீடும், நாடும், போற்றிடும் அளவுக்கு பல்லாண்டு பெருமைக்குரிய வாழ்வு வாழ வாழ்த்திட வேண்டும் என்று அனைவரையும் அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஏணிப்படியில் நின்று சண்டை போட்டபோது, ஏணி சரிந்ததால் நடிகர் ஜீவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவருடைய காலிலும், தலையிலும் பலத்த அடிபட்டது.Ôமச்சக்காரன் ´´காக்க காக்க´´ படத்தில் வில்லனாகவும், ´´திருட்டுப்பயலே´´ படத்தில் வில்லத்தனம் பொருந்திய கதாநாயகனாகவும் நடித்தவர், ஜீவன். இவர் கதாநாயகனாக நடித்த ´´நான் அவன் இல்லை´´ என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து ஜீவன், ´´மச்சக்காரன்´´ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காம்னா நடிக்கிறார். தமிழ்வாணன் டைரக்டு செய்கிறார்.சண்டை காட்சிஇந்த படத்துக்காக, ஒரு போலீஸ் நிலையத்தில் சண்டை நடப்பது போன்ற காட்சி, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள மணிமஹாலில் படமாக்கப்பட்டது. சூப்பர் சுப்பராயன் அமைத்த இந்த சண்டை காட்சியில் ஜீவனுடன், 6 ஸ்டண்ட் நடிகர்கள் மோதினார்கள்.ஜீவன், ஒரு ஏணிப்படியில் ஏறி நின்றபடி, ஒரு ஸ்டண்ட் நடிகரை பின்னால் எட்டி உதைப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்க திட்டமிட்டார்கள். அந்த காட்சியை படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக ஏணிப்படி சரிந்தது. இதனால் ஜீவன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.தலையில் அடிஅவருடைய இடது காலிலும், தலையிலும் பலத்த அடிபட்டது. அதைப்பார்த்து படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.ஜீவனை, அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்கள். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவருடைய காலிலும், தலையிலும் ´´ஸ்கேன்´´ எடுத்து பார்க்கப்பட்டது. அதில், கோளாறு எதுவும் இல்லாததால், சிகிச்சைக்குப்பின் ஜீவன் வீடு திரும்பினார்.

