
அழகிய தமிழ் மகன்' படத்தில் நடிக்கும் விஜய், அடுத்து 'குருவி' என்ற படத்தில் நடிக்கிறார். இதை தரணி இயக்குகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவருக்குப் பதிலாக நயன்தாரா நடிக்கிறார். இதுகுறித்து நயன்தாரா கூறியதாவது:
இப்போது விஷாலுடன் 'சத்யம்' படத்தில் நடிக்கிறேன். இதையடுத்து விஜய்யின் 'குருவி' படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். 'சிவகாசி' படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆடினேன். இப்படத்தில் முதன்முறையாக அவருடன் ஜோடியாக நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
வரும் 15 ம் தேதியிலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. நவம்பர் மாதத்திலிருந்து இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். ஆர்.டி.ராஜசேகர் இயக்கத்தில் ஆரியா ஜோடியாக நான் நடிப்பதாக வந்த தகவல் உண்மையில்லை. இவ்வாறு நயன்தாரா சொன்னார்.
இப்போது விஷாலுடன் 'சத்யம்' படத்தில் நடிக்கிறேன். இதையடுத்து விஜய்யின் 'குருவி' படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். 'சிவகாசி' படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆடினேன். இப்படத்தில் முதன்முறையாக அவருடன் ஜோடியாக நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
வரும் 15 ம் தேதியிலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. நவம்பர் மாதத்திலிருந்து இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். ஆர்.டி.ராஜசேகர் இயக்கத்தில் ஆரியா ஜோடியாக நான் நடிப்பதாக வந்த தகவல் உண்மையில்லை. இவ்வாறு நயன்தாரா சொன்னார்.
No comments:
Post a Comment